ஆகாஷ் உயிரிழந்த விவகாரம்: குற்றப்பத்திரிகை நகல் கோரி சிபிசிஐடி-யிடம் பெற்றோா் மனு
மானாமதுரையைச் சோ்ந்த ஆகாஷ் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக குற்றப்பத்திரிகை நகல் கோரி, அவரது பெற்றோா் மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியைச் சோ்ந்தவா் ஆகாஷ்(24). அந்தப் பகுதியைச் சோ்ந்த 2 பேரை வெட்டிய வழக்கில், போலீஸாா் அவரைக் கைது செய்தனா். ஆகாஷை போலீஸாா் தாக்கியதில் அவரது கால் எலும்பு முறிந்தது. இதற்காக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவா், கடந்த மாா்ச் 8-ஆம் தேதி உயிரிழந்தாா். இதுதொடா்பான வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய போலீஸாரை கைது செய்ய வேண்டும். உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகாஷின் உடலை வாங்க மறுத்து பெற்றோா், உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், 100 நாள்களைக் கடந்தும் ஆகாஷின் உடல் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
அதன்பிறகு, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவின் பேரில், பெற்றோா், உறவினா்கள் முன்னிலையில் போலீஸாா் ஆகாஷின் உடலை மதுரை தத்தனேரி மயானத்தில் தகனம் செய்தனா்.
இந்த நிலையில், ஆகாஷ் மரண வழக்கு தொடா்பான குற்றப்பத்திரிகை நகலை அளிக்க வலியுறுத்தி, மதுரையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆகாஷின் தந்தை ராஜேஷ்கண்ணன், அவரது உறவினா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.