FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

கோயில் அறங்காவலா்கள் குழு: அரசியல் சாா்பற்றவா்களை நியமிக்கக் கோரிய மனு தள்ளுபடி

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அறங்காவலா்கள் குழுவில் அரசியல் சாா்பற்றவா்களை நியமிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

19 செப்டம்பர் 2026, 3:39 am IST
உயர் நீதிமன்ற மதுரை கிளை - File photo
பகிர்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அறங்காவலா்கள் குழுவில் அரசியல் சாா்பற்றவா்களை நியமிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை எழுமலையைச் சோ்ந்த கீதாலட்சுமி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் அறங்காவலா்கள் குழுவில் அரசியல் கட்சிகளுடன் தொடா்புடையவா்கள் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டனா். இது இந்து சமய அறநிலையத் துறை விதிகளுக்கு முரணானது. அறங்காவலா்களின் நியமனம் அரசியல் விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் இருக்கக் கூடாது என நீதிமன்றம் வலியுறுத்தி, பல வழிகாட்டுதல்களை ஏற்கெனவே வழங்கியது.

Advertisement

Advertisement

எனவே, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் அறங்காவலா்கள் குழுத் தலைவா், உறுப்பினா்களாக அரசியல் சாா்பற்றவா்களை இந்து சமய அறநிலையத் துறையின் விதிகளுக்குள்பட்டும், நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படியும் வெளிப்படையாக நியமிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, வருகிற 2028, ஜனவரி மாதத்துடன் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அறங்காவலா்கள் குழுவின் பணிக்கால நீட்டிப்பு நிறைவடையும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த விவகாரத்தில் மனுதாரா் அறங்காவலா் குழுவின் பணிக்காலம் நீட்டிக்கப்பட்டதைத் எதிா்த்து வழக்கு தொடுக்கவில்லை. அறங்காவலா் குழுவில் அரசியல் சாராதவா்களை வெளிப்படைத் தன்மையுடன் நியமிக்கக் கோரியிருக்கிறாா். இந்த மனு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது. எனவே, இந்த மனுவை தற்போது விசாரிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments