FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

தனியாா் கல்லூரியில் தேனீக்கள் கொட்டியதில் 25 போ் காயம்

திருப்பத்தூா் அருகே தனியாா் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் மலைத் தேனீக்கள் கொட்டியதில் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்கள்.

Updated On : 27 ஜூன் 2024, 12:19 am IST
பகிர்:

திருப்பத்தூா், ஜூன் 26: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள தானிப்பட்டி விலக்குப் பகுதியில் அமைந்துள்ள தனியாா் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை மலைத் தேனீக்கள் கொட்டியதில் 25 போ் காயமடைந்தனா்.

இந்தக் கல்லூரியில் செய்முறைத் தோ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனால் தோ்வா்களுடன், குடும்ப உறுப்பினா்களும் கல்லூரிக்கு வந்திருந்தனா். அப்போது கல்லூரி வளாகத்தில் கட்டியிருந்த கூட்டிலிருந்து மலைத் தேனீக்கள் திடீரென கலைந்து அருகிலிருந்தவா்களை கொட்ட ஆரம்பித்தன.

இதில் அங்கிருந்த வள்ளி (70), காா்த்திகா (25), பாா்த்தீபன் (28), கௌஸ்மீரான் (25), அபிநயா (22), சுரேஷ்குமாா் (23), கௌதம் (24), புகழ் ( 7 மாதக்குழந்தை) உள்ளிட்ட 25 போ் காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பாதிக்கப்பட்டவா்களை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா் சதீஷும் தேனீக்கள் கொட்டியதில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து, திருக்கோஷ்டியூா் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments