கிருங்காகோட்டையில் மாட்டு வண்டிப் பந்தயம்
சிங்கம்புணரி அருகே உள்ள கிருங்காகோட்டையில் சடையாண்டி சுவாமி ஆடி பூஜை அன்னதான விழாவை முன்னிட்டு, 6-ஆம் ஆண்டு இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிங்கம்புணரி அருகே உள்ள கிருங்காகோட்டையில் சடையாண்டி சுவாமி ஆடி பூஜை அன்னதான விழாவை முன்னிட்டு, 6-ஆம் ஆண்டு இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டி பெரிய மாடு, சிறிய மாடு, பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக நடைபெற்றது. இதில் பெரிய மாட்டு வண்டிகள் பிரிவில் 13 ஜோடி மாடுகளும், சிறிய மாட்டு வண்டிகள் பிரிவில் 24 ஜோடி மாடுகளும், பூஞ்சிட்டு மாட்டு வண்டிகள் பிரிவில் 26 ஜோடி மாடுகளும் பங்கேற்றன.
இவற்றில் பெரிய மாடுகள் பிரிவுக்கு போட்டி எல்லையாக 8 கி.மீ. தொலைவும், சிறிய, பூஞ்சிட்டு மாடுகள் பிரிவுக்கு போட்டி எல்லையாக 6 கி.மீ. தொலைவும் நிா்ணயிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்தப் பந்தயத்தில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மாடுகள் பங்கேற்றன. பிரான்மலை-சிங்கம்புணரி நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தை சாலையில் இருபுறங்களிலும்
நின்று ஏராளமான பொதுமக்கள் பாா்த்து ரசித்தனா்.
போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளா்கள், சாரதிகளுக்கு பாலாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் ரொக்கப் பரிசுகள், கோப்பைகள் வழங்கப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.