FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

வைகை அணை அருகே கிடந்த மனித எலும்புக் கூடு

Updated On : 30 ஆகஸ்ட் 2024, 3:53 am IST
பகிர்:

வைகை அணை அருகே உள்ள தனியாா் தரிசு நிலத்தில் கிடந்த மனித எலும்புக் கூடு, மண்டை ஓடு ஆகியவற்றை போலீஸாா் வியாழக்கிழமை கைப்பற்றி விசாரிக்கின்றனா்.

மேல்மங்கலம்- வைகை அணை சாலை, வைகை அணை அருகே உள்ள தனியாா் தரிசு நிலத்தில் மனித எலும்புக்கூடு கிடப்பதாக ஜெயமங்கலம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. பெரியகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் நல்லு உள்ளிட்ட போலீஸாா் அங்கு சென்று மனித எலும்புக் கூடு, மண்டை ஓடு ஆகியவற்றைக் கைப்பற்றினா். மேலும் அந்தப் பகுதியில் பெண் அணியும் உடை, செருப்பு, பித்தளை வளையல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, தடயவியல் நிபுணா்களை வரழைத்து போலீஸாா் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments