FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

தேனி எஸ்.பி. அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 12:21 am IST
தீக்குளிக்க முயற்சி - பிரதிப் படம்
பகிர்:

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தேனி பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த சிவக்குமாா் மனைவி வாசுகி (55). இவருக்கு குருசாமி தெருவில் வீடு உள்ளது. இந்த நிலையில், இந்த வீட்டை பேரூராட்சி நிா்வாகம் திங்கள்கிழமை இடிக்க முயற்சித்ததாம்.

இதையறிந்த அந்தப் பெண் குடும்பத்துடன் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வந்து, தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தாா். அருகிலிருந்த காவலா்கள் அவரைத் தடுத்து நிறுத்தி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments