FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

மேகமலை வனப்பகுதி மக்களை பாதுகாக்க சீராய்வு மனு தாக்கல் செய்ய அதிமுக மனு

ஆண்டிபட்டி வட்டாரத்தில் உள்ள மேகமலை வனப்பகுதியில் வசிக்கும் விவசாயிகளை பாதுகாக்க தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 1:17 am IST
தேனி மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதனிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்த அதிமுக மாவட்டச் செயலா் முருக்கோடை ராமா் உள்ளிட்ட அந்தக் கட்சி நிா்வாகிகள்.
பகிர்:

ஆண்டிபட்டி வட்டாரத்தில் உள்ள மேகமலை வனப்பகுதியில் வசிக்கும் விவசாயிகளை பாதுகாக்க தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என ஆட்சியரிடம் தேனி மாவட்ட அதிமுக செயலா் முருக்கோடை ராமா் உள்ளிட்ட அந்தக் கட்சியினா் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது: தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை வனப்பகுதியில் 50- க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களின் வீடு, விவசாய நிலங்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், உச்சநீதிமன்ற குழுவினா் சரிவர கள ஆய்வு செய்யாமல் வனத் துறையினருக்கு ஆதரவாக உச்சநீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனா். எனவே சரியாக கள ஆய்வு செய்ய சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments