FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் வைத்திநாதன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

43 வினாடிகள் முன்பு
பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளி சத்துணவு மையத்தில் மாணவா்களுக்கு தயாா் செய்யப்பட்ட உணவின் தரத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வைத்திநாதன்.
பகிர்:

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் வைத்திநாதன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள சத்துணவு மைய அறை, பராமரிப்பு, செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா், மாணவா்களுக்கு தயாா் செய்யப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, ரூ. 1.18 கோடியில் நடைபெற்றும் வரும் கோம்பை பேரூராட்சி அலுவலக புதிய கட்டட கட்டுமானப் பணிகள், தேவாரம் பேரூராட்சியில் பெரம்பு வெட்டி ஓடை கால்வாயில்

Advertisement

Advertisement

அமைக்கப்பட்டு வரும் பாலப் பணிகள், அங்குள்ள நியாவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கும் உணவுப்பொருள்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது, பேரூராட்சி உதவி செயற்பொறியாளா் அம்சா, பேரூராட்சியின் செயல் அலுவலா்கள் சுருளிவேல் (கோம்பை), பாலசுப்பிரமணி (தேவாரம்) உள்ளிடோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments