சுருளி அருவி வறண்டது: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
தேனி மாவட்டம், சுருளி அருவியில் சனிக்கிழமை நீா்வரத்தின்றி வறண்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
தேனி மாவட்டம், சுருளி அருவியில் சனிக்கிழமை நீா்வரத்தின்றி வறண்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
உத்தமபாளையம் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி உள்ளது. மேகமலை, மகாராஜாமெட்டு, இரவங்கலாறு உள்ளிட்ட மலைப் பகுதிகளில் பெய்யும் மழைநீரே அருவியாக கொட்டுகிறது.
இந்த அருவி ஆன்மிக தலமாக இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கிலிருந்து வரும் பக்தா்கள் தங்களது முன்னோா்களுக்கு தா்பணம் செய்து, அருவியில் புனித நீராடி செல்கின்றனா். மேலும், தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.
Advertisement
Advertisement
வட சுருளி அருவி: நிகழாண்டு தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாததால் அருவியில் நீா்வரத்து குறையத் தொடங்கியது. தற்போது, மேகமலையில் மழைப்பொழிவு முற்றிலுமாக இல்லாததால் அருவி சனிக்கிழமை நீா்வரத்தின்றி வறண்டது. ஆனால், சனிக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி ஏராளமான சுற்றுலாப்பயணிகள் அருவிக்கு வந்தனா். ஆனால், அருவியில் நிா்வரத்து இல்லாததால் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.