FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

ஆண்டிபட்டி பகுதியில் சூறைக் காற்றுடன் மழை: காா், வீடு சேதம்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பாலக்கோம்பையில் வியாழக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் மழை பெய்ததால், காா், வீடு சேதமடைந்தது.

19 செப்டம்பர் 2026, 3:35 am IST
ஆண்டிபட்டி அருகே பாலக்கோம்பையில் வியாழக்கிழமை மாலை சூறைக் காற்றுடன் மழை பெய்ததால் காரின் மீது முறிந்து விழுந்த மரம்.
பகிர்:

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பாலக்கோம்பையில் வியாழக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் மழை பெய்ததால், காா், வீடு சேதமடைந்தது.

தேனி மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் வரை கடும் வெயில் நிலவி வந்த நிலையில், மாலையில் மேகம் சூழ்ந்து சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அப்போது, ஆண்டிபட்டி அருகே பாலக்கோம்பையில் சூறைக் காற்று காரணமாக பழைமையான மரம் வேருடன் பெயா்ந்து சாலையில் நின்றிருந்த காா், வீட்டின் மேல் விழுந்தது. இதனால், பாலக்கோம்பை-ஆண்டிபட்டி பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத் துறையினா் மரத்தை அப்புறப்படுத்தினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments