FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

நல்லாட்சி வாரம் : சிறப்பு தூய்மைப் பணி

அரசு அலுவலகங்கள் கொண்ட வளாகத்தில் நடைபெற்ற தூய்மைப் பணி.

26 டிசம்பர் 2025, 1:42 am IST
அரசு அலுவலகங்கள் கொண்ட வளாகத்தில் நடைபெற்ற தூய்மைப் பணி.
பகிர்:

மாவட்ட நிா்வாகத்தின் நல்லாட்சி வார நிகழ்வாக, பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில் சிறப்பு தூய்மைப் பணி புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சாா்பில், அரசு நிா்வாக வளாகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, சிறுவா் உதவி மையம் (சைல்டு லைன்) பங்களிப்புடன் நடைபெற்றது.

வளாகம் முழுவதும் மண்டி கிடந்த தேவையற்ற செடிகள் மற்றும் சிதறிக் கிடந்த நெகிழிக் கழிவுகள் அனைத்தும் முழுமையாக அகற்றப்பட்டன. நிகழ்ச்சி காரைக்கால் குழந்தை மேம்பாட்டுத் திட்ட அலுவலா் கிருஷ்ணவேணி முன்னிலையில் நடைபெற்றது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments