FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மயிலாடுதுறை

ஆதிதிராவிடா் நலப்பள்ளியில் ஆசிரியா் பணி வாய்ப்பு

Updated On : 4 ஜூலை 2024, 2:50 am IST
பகிர்:

மயிலாடுதுறை, ஜூலை 3: அரசு ஆதிதிராவிடா் நலப்பள்ளியில் காலியாக உள்ள 3 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின்கீழ் இயங்கிவரும் மாதானம் அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப்பள்ளியில் தமிழ், ஆங்கிலம், அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள 3 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளது. இந்த இடங்களுக்கு ஜூலை 4-ஆம் தேதிமுதல் 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் எழுத்து மூலமான, விண்ணப்பங்களை நேரடியாகவோ/அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித் தகுதி சான்றுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 2-வது தளத்தில் இயங்கி வரும் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் ஜூலை 6-ஆம் தேதி மாலை 5.45-க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments