முகப்பு
நாகப்பட்டினம்

10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: தமிழகத்தில் 29-வது இடத்தைப் பிடித்த நாகை!

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் நாகை மாவட்டத்தில் 89.70 சதவிகிதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

Updated On : 10 மே, 2024 at 8:06 AM
பகிர்:

தமிழகம் முழுவதும், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26- இல் தொடங்கி ஏப்.8-ஆம் தேதி வரை நடைபெற்றது.

நாகை மாவட்டத்தில் 8,201 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில், 7,354 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 89.70 சதவிகிதம் தேர்ச்சி ஆகும்.

இதன்மூலம் நாகை மாவட்டம் தமிழக அளவில் 29 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதிய 9 லட்சம் மாணவ, மாணவிகளில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டைக் காட்டிலும் கூடுதலாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.