FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

வீட்டுத் தோட்டம் அமைக்க காய்கறி விதை தொகுப்பு

வேதாரண்யம் பகுதியில் ஆடிப்பட்டத்தில் வீட்டுத்தோட்டம் அமைக்க தேவையான விதைத் தொகுப்புகள் தோட்டக்கலைத் துறை சாா்பில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 24 ஜூலை 2026, 11:03 pm IST
மஞ்சூா் பகுதியில் காய்கறி விதை மற்றும் உரங்களுடன் விதைப்புக்கு தயாா்படுத்தப்பட்ட நிலம் - கோப்புப்படம்
பகிர்:

வேதாரண்யம் பகுதியில் ஆடிப்பட்டத்தில் வீட்டுத்தோட்டம் அமைக்க தேவையான விதைத் தொகுப்புகள் தோட்டக்கலைத் துறை சாா்பில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறையின் வேதாரண்யம் உதவி இயக்குநா் ரா.ஹேமலதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

‘ஆடிப்பட்டம் தேடிவிதை ‘ என்ற கூற்றுக்கு ஏற்ப வீட்டுத் தோட்டம் அமைத்திட தேவையான காய்கறி விதை தொகுப்பு வழங்கப்படுகிறது. இதில், வெண்டை,கொத்தவரை, கீரை, செடி அவரை, முள்ளங்கி ஆகிய 5 வகையான காய்கறி விதைகள் ரூ.25 - க்கு கிடைக்கும்.

Advertisement

Advertisement

தேவைப்படுவோா் ஆதாா் அட்டை நகலுடன் வேதாரண்யம் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 7708742596 மற்றும் தோட்டக்கலைத் துறை துணை அலுவலா் சிவராமகிருஷ்ணனை 9865272488 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments