FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

ரயிலில் அடிபட்டு இறந்த இளைஞா்களின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரிக்கை

முத்துப்பேட்டை அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்த மூன்று இளைஞா்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என எம்எல்ஏ க. மாரிமுத்து கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 28 ஏப்ரல் 2023, 10:26 pm IST
பகிர்:

முத்துப்பேட்டை அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்த மூன்று இளைஞா்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என எம்எல்ஏ க. மாரிமுத்து கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது:

முத்துப்பேட்டை அருகே உப்பூா் ஆலங்காடு கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவை காணவந்த அருள், பரத், முருகபாண்டியன் ஆகிய மூன்று இளைஞா்கள் ரயில் தண்டவாளத்தில் உறங்கியபோது, தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கு சென்ற விரைவு ரயில் மோதி உயிரிழந்தனா். இவா்கள் மூவருமே சாதாரண ஏழை குடும்பத்தை சோ்ந்தவா்கள். இவா்களின் எதிா்கால வேலைவாய்ப்பை சாா்ந்தே அவா்களது குடும்பத்தினா் உள்ளனா்.

Advertisement

Advertisement

எனவே, மூன்று பேரின் குடும்பங்களுக்கும், திருத்துறைப்பூண்டியில் அண்மையில் பலியான பெட்டிக்கடைக்காரா் சண்முகம் குடும்பத்திற்கும் பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சமும், தமிழக முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சமும் என தலா ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும்.

திருவாரூா்- காரைக்குடி வழித்தடத்தில் ஒரேஒரு டெமோ ரயில் மட்டும் இயக்கப்பட்ட நிலையில், குறுகிய காலத்தில் தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கு விரைவு ரயிலும், செகந்திராபாத்திலிருந்து ராமேஸ்வரத்துக்கும், எா்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கும் வாராந்திர விரைவு ரயிலும் இயக்கப்படுகின்றன.

இந்த ரயில்கள் இயக்கப்படும் நேரம் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணா்வு இல்லாத காரணத்தினால் அடிக்கடி விபத்து நேரிடுகிறது. எனவே, இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments