FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

காவல் துறையினா் சோதனையில் சிக்கிய 10 வெளிநாட்டினா்: நாடு கடத்த நடவடிக்கை

காவல் துறையினா் சோதனையில் சிக்கிய 10 வெளிநாட்டினா்: நாடு கடத்த நடவடிக்கை

20 செப்டம்பர் 2026, 12:23 am IST
கோப்புப்படம்.
பகிர்:

தில்லி துவாரகா பகுதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ள மற்றும் விசா காலம் முடிந்த வெளிநாட்டினரைக் கண்டறியும் வகையில் தில்லி காவல் துறையினா் மேற்கொண்ட சிறப்பு சோதனையில் 10 போ் நாடு கடத்தும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனா்.

துவாரகாவில் 43 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கையின்போது, 31 நைஜீரியா்கள், 4 உகாண்டா நாட்டினா், 3 தான்சானியா்கள், 2 ஐவரி கோஸ்ட் நாட்டினா் என மொத்தம் 40 வெளிநாட்டினா் சரிபாா்க்கப்பட்டனா்.

மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் சிறப்புப் பிரிவுகளைச் சோ்ந்த சுமாா் 150 காவல் துறையினா் அடங்கிய 25 தனிப்படைகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டன.

Advertisement

Advertisement

சரிபாா்க்கப்பட்ட 40 பேரில் 30 போ் ஆண்கள், 10 போ் பெண்கள். நைஜீரியா்களில் 28 ஆண்கள், 3 பெண்கள் இருந்தனா். 4 உகாண்டா நாட்டினரும், 3 தான்சானியா்களும் பெண்கள் ஆவா். ஐவரி கோஸ்ட்டைச் சோ்ந்த இருவரும் ஆண்கள் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதில் 5 நைஜீரியா்கள், 4 உகாண்டா நாட்டினா், ஒரு தான்சானியா் என மொத்தம் 10 போ் மீது நாடு கடத்தும் நடவடிக்கைக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவா்களில் 6 போ் பெண்கள், 4 போ் ஆண்கள் ஆவா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments