கோப்புப்படம்  
கன்னியாகுமரி

கன்னியாகுமரி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

கன்னியாகுமரி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் (செப். 26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை முதல் சாரல் மழை பெய்து வந்த நிலையில், இரவில் கனமழை பெய்யத் தொடங்கியது.

இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக நாகர்கோவில் நகரப் பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.

இந்த நிலையில், இன்றும் மழை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், குமரியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரா. அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திற்பரப்பில் 180 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறையில் 140 மி.மீ, கோதையாறில் 130 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

இதனிடையே, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Holiday has been declared for schools in Kanyakumari district today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“Yongqing Temple” தீப்பற்றி எரிந்த கோயில் கட்டடம்! கிபி 536-ல் நிறுவப்பட்டது!

சென்னை ஒன் செயலியில் ஒரு ரூபாய்க்கு மெட்ரோ, பேருந்து டிக்கெட்! புதிய சலுகை...

தில்லி கார் குண்டு வெடிப்பு: அசாமில் 15 பேர் கைது

தில்லி கார் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

தில்லி கார் குண்டுவெடிப்பு: செங்கோட்டை மெட்ரோ மறுஅறிவிப்பு வரை மூடல்!

SCROLL FOR NEXT