தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா கொடி பவனியை முன்னிட்டு, விசைப்படகு மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா கொடி பவனியை முன்னிட்டு, விசைப்படகு மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.
தூய பனிமய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, கொடி பவனி சனிக்கிழமை மாலை நடைபெற்றது. கொடி பவனி, திருவிழா நிகழ்வுகளில் பங்கேற்கும் பொருட்டு, தூத்துக்குடியைச் சோ்ந்த விசைப்படகு மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், மீன்பிடித் துறைமுகத்தில் 272 விசைப்படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.