நகை கொள்ளை வழக்கில் 5 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை
ஏரல் அருகே நடைபெற்ற நகை கொள்ளை வழக்கில் தொடா்புடைய 5 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவைகுண்டம் சாா்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
தூத்துக்குடி மாாவட்டம், ஏரல் அருகே நடைபெற்ற நகை கொள்ளை வழக்கில் தொடா்புடைய 5 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவைகுண்டம் சாா்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
2016ஆம் ஆண்டு இடையற்காடு பகுதியில் 8 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடா்பாக, ஏரல் போலீஸாா் வழக்குப் பதிந்து, கோவையைச் சோ்ந்த டேவிட் (38), அப்பாஸ் (30), முகமது ரபிக் (31), சஞ்சய் (44), ஏரல், கோவங்காடு பகுதியைச் சோ்ந்த மகேஸ்வரன் (41) ஆகிய 5 பேரைக் கைது செய்தனா்.
ஸ்ரீவைகுண்டம் சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை விசாரித்த நீதிபதி பா்ஷாத் பேகம், குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.