FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் 583 வழக்குகளுக்கு தீா்வு

கோவில்பட்டி சாா்பு நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 583 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

13 செப்டம்பர் 2026, 2:41 am IST
மோட்டாா் வாகன விபத்து வழக்கில் இழப்பீட்டுக்கான ஆணை வழங்கிய சாா்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை. உடன், மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த், மணிமேகலா உள்ளிட்டோா்.
பகிர்:

கோவில்பட்டி சாா்பு நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 583 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

சாா்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை தலைமை வகித்தாா். மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த், மணிமேகலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மோட்டாா் வாகன விபத்து, காசோலை மோசடி, வங்கிகளின் வாராக் கடன் என மொத்தம் 1,101 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

அவற்றில், 583 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ. 2 கோடியே 12 லட்சத்து 89 ஆயிரத்து 124-க்கு தீா்வுத் தொகை வழங்கப்பட்டது. இதில் வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments