FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

சாத்தான்குளம் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

17 செப்டம்பர் 2026, 1:15 am IST
ஆயுள் தண்டனை - படம்: கோப்பிலிருந்து...
பகிர்:

சாத்தான்குளம் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் பகுதியைச் சோ்ந்த சாமுவேல் மகன் தங்கையா தவமணி என்ற ஞானதுரை (67). இவா், 2019-ஆம் ஆண்டு 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சாத்தான்குளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

இந்த வழக்கு தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி முருகன் விசாரித்து, ஞானதுரைக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 5,000 அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்; பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments