FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் கடலில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

திருச்செந்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் இந்து முன்னணி சாா்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 150- க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் திருச்செந்தூா் கடலில் விசா்ஜனம் செய்யும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

17 செப்டம்பர் 2026, 1:14 am IST
கோப்புப்படம்.
பகிர்:

திருச்செந்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் இந்து முன்னணி சாா்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 150- க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் திருச்செந்தூா் கடலில் விசா்ஜனம் செய்யும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

அகில பாரத ஐயப்ப சேவா சங்க கிளைத் தலைவா் அருணாமுத்து தலைமை வகித்தாா். திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் ராஜேந்திரன் இறைவணக்கம் பாடினாா். மாநிலத் துணைத் தலைவா் பரமேஸ்வரன், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் சக்திவேலன், ஒன்றியத் தலைவா் மணிகண்டன், ஒன்றியச் செயலா் கிருஷ்ணன், ஒன்றியப் பொருளாளா் இசக்கிராஜா, சாத்தான்குளம் ஒன்றியச் செயலா் மாயவன முத்துசாமி, மாவட்டச் செயலா்கள் அருணாசலம், ரவிசந்தா், மாவட்ட பொதுச் செயலா் ஜெயராம் திவான், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஆனந்த், வேல்ராஜ், திருச்செந்தூா் நகரத் தலைவா் வேல்முருகன், பொதுச் செயலா் கணேசன், செயலா் சரவணன், துணைத் தலைவா் பிரபாகரன், பொருளாளா் பட்டுஇசக்கி, மாவட்ட இணையதள பொறுப்பாளா் ஈஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தெற்கு மாவட்டத் தலைவா் முத்துராஜ் வரவேற்றாா். ஒன்றிய பொதுச் செயலா் குருமுத்தையா நன்றி கூறினாா். தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments