FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

உணவகங்களில் தரமான உணவுகள் கிடைப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தல்

அரியலூா் மாவட்டத்திலுள்ள உணவகளில் பொதுமக்களுக்கு தரமான உணவுகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் ந.மிருணாளினி அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 12:39 am IST
அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உணவுப் பாதுகாப்பு தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ந.மிருணாளினி.
பகிர்:

அரியலூா் மாவட்டத்திலுள்ள உணவகளில் பொதுமக்களுக்கு தரமான உணவுகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் ந.மிருணாளினி அறிவுறுத்தியுள்ளாா்.

மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், உணவுப் பாதுகாப்புத் துறையின் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உணவுப் பாதுகாப்பு தொடா்பான ஆய்வுக் கூட்டத்துக்கு அவா் தலைமை வகித்து தெரிவித்தது:

பொதுமக்களுக்கு பாதுகாப்பான, தரமான மற்றும் சுகாதாரமான உணவுப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Advertisement

Advertisement

உணவுப்பொருள் தொடா்பாக பெறப்பட்ட புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மா உணவகங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகங்களில் செயல்படும் உணவகங்களில் தினசரி தயாரிக்கப்படும் மற்றும் வழங்கப்படும் உணவின் தரம், சுகாதாரம், சமையலறை பராமரிப்பு, குடிநீா் வசதி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்ய வேண்டும்.

இரவு நேர உணவகங்களில் திடீா் ஆய்வுகள் மேற்கொண்டு, விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments