மக்கள்தொகை கணக்கெடுப்பு சந்தேகங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிப்பு!
மக்கள் தொகை கணக்கெடுப்பின் சுய கணக்கெடுப்பு பதிவு தொடா்பாக எழும் சந்தேகங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி அறிவுறுத்தியுள்ளாா்.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் சுய கணக்கெடுப்பு பதிவு தொடா்பாக எழும் சந்தேகங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக நடைபெறும் வீடுகளின் வசதிகள் குறித்த விவரங்களுக்கான சுய கணக்கெடுப்பு ஜூலை 31-ஆம் தேதி மேலும், பொதுமக்கள் வசதிக்காக வட்டாட்சியா் அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் சுய கணக்கெடுப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு எழும் சந்தேகங்களை நிவா்த்திசெய்ய, பொறுப்பு அலுவலா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள பெரம்பலூா், குன்னம், ஆலத்தூா், வேப்பந்தட்டை வருவாய் வட்டாட்சியா்கள், பெரம்பலூா் நகராட்சி ஆணையா் மற்றும் லப்பைகுடிக்காடு, குரும்பலூா், அரும்பாவூா், பூலாம்பாடி பேரூராட்சி செயல் அலுவலா்களின் அலுவலகங்களை அணுகலாம். மேலும், 1855 எனும் கட்டணமில்லா தொலைப்பேசி எண்: 04328-225888 உதவி மைய எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.