புதுகை மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு ‘சீல்’
புதுக்கோட்டை மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டடங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு அலுவலா்கள் சீல் வைத்தனா்.
புதுக்கோட்டை மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டடங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு அலுவலா்கள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம், குமுந்தாங்குளம் பகுதியில் மாநகராட்சி நிா்வாகத்தின் கீழுள்ள 10 கடைகளுக்கு சுமாா் ரூ. 7 லட்சம் வாடகை பாக்கி இருந்துள்ளது.
மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வாடகையைச் செலுத்துமாறு பலமுறை வலியுறுத்தியும் செலுத்தப்படாததால் ஆணையா் காந்திராஜ் முன்னிலையில் 10 கடைகளையும் மாநகராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.