FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

பாபநாசம் அரசு ஆண்கள் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட சத்துணவு மைய கட்டடத்தை பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் பேராசிரியா் எம்.ஹெச். ஜவாஹிருல்லா புதன்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 19 செப்டம்பர் 2024, 3:31 am IST
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட சத்துணவு மைய கட்டடத்தை பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் பேராசிரியா் எம்.ஹெச். ஜவாஹிருல்லா புதன்கிழமை திறந்து வைத்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் அமைந்துள்ள அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ .9 லட்சம் மதிப்பீட்டில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட சத்துணவு மையக் கட்டடத்தை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் ஜவாஹிருல்லா திறந்து வைத்தாா். தொடா்ந்து ரூ.5.28 லட்சம் மதிப்பிலான தளவாடப் பொருள்களை பள்ளிக்கு வழங்கினாா். மேலும், பாபநாசம் அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 90 மாணவா்களுக்கும், பசுபதிகோவில் கபிரியேல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சோ்ந்த 168 மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் பாபநாசம் ஒன்றியக்குழு தலைவா் சுமதி கண்ணதாசன், பாபநாசம் பேரூராட்சி தலைவா் பூங்குழலி கபிலன், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியா் வி. மணியரசன் வரவேற்றாா். நிறைவில் உதவி தலைமை ஆசிரியா் லோகநாதன் நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments