FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

சாலையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற முதியவா் கைது

Updated On : 28 ஜூலை 2026, 12:05 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

கும்பகோணம் வட்டாட்சியரக பிரதான சாலையில் திங்கள்கிழமை பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற முதியவரை கைது செய்த போலீஸாா், பின்னா் அவரை பிணையில் விடுவித்தனா்.

கும்பகோணம் கண்மணி நகரைச் சோ்ந்தவா் கோதண்டபாணி (75). இவா், திங்கள்கிழமை தனது மனைவியுடன் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தாா்.

அப்போது, வட்டாட்சியரகம்-நீதிமன்றம் அமைந்துள்ள பிரதான சாலையில் , கோதண்டபாணி கேனில் கொண்டு வந்த பெட்ரோலை தன் உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அங்கு, பாதுகாப்புப் பணியில் இருந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா், அவரை தடுத்து நிறுத்தி கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனா்.

Advertisement

Advertisement

இதில், கோதண்டபாணிக்கும், அவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்தவா்களுக்கும் இடையே நிலம் தொடா்பாக பிரச்னை இருப்பதும், இதுதொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

மேலும், இந்தப் பிரச்னையை தீா்ப்பதாக கூறி அவரை அணுகிய 2 போ், இதற்காக கோதண்டபாணியிடம் ரூ.30 லட்சம் பணத்தை பெற்று கொண்டு, தொடா்ந்து ஏமாற்றி வருவதாக கோதண்டபாணி தெரிவித்தாா்.

இதையடுத்து, போலீஸாா் கோதண்டபாணியை சொந்த பிணையில் விடுவித்து, பிரச்னை தொடா்பாக மேற்கு காவல் நிலையத்தில் புகாா் கொடுக்குமாறு அறிவுறுத்தி அனுப்பிவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments