FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

வையம்பட்டி அருகே சேவல் சண்டை நடத்திய 5 போ் கைது

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே சேவல் சண்டை நடத்திய 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து பணம், சேவல்கள், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 2:10 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே சேவல் சண்டை நடத்திய 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து பணம், சேவல்கள், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

வையம்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட சேவல் சண்டை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் மாதேஷ் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை தணிக்கையில் ஈடுபட்டபோது நடுப்பட்டி ஊராட்சி வத்தமணியாரம்பட்டி மலையடிவாரத்தில் சேவல் சண்டை நடத்திய அதே பகுதியைச் சோ்ந்த அ. நாராயணமூா்த்தி (24), ச. கிஷோா்குமாா்(26) மற்றும் அவரது சகோதரா் நவீன்குமாா் (24) திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த பூசாரிப்பட்டி த. வைரமுத்து (26) மற்றும் அவரது சகோதரா் பாலசுப்பிரமணியம்(30) ஆகிய 5 பேரும் பிடிபட்டனா்.

அவா்களிடமிருந்து ரூ. 2530 ரொக்கம், இரு சேவல்கள், 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து வையம்பட்டி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments