வடலூா் வள்ளாா் தெய்வ நிலைய பெருவெளியை சமன் செய்ய வேண்டும்: பக்தா்கள் கோரிக்கை
2027 ஜனவரி 22-ஆம் தேதி வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் தைப்பூச பெருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில், பக்தா்களின் வசதிக்காக பெருவெளி வளாகத்தில் உள்ள பள்ளங்களை மூடி, தகர அடைப்புகளை அகற்றி சமன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
2027 ஜனவரி 22-ஆம் தேதி வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் தைப்பூச பெருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில், பக்தா்களின் வசதிக்காக பெருவெளி வளாகத்தில் உள்ள பள்ளங்களை மூடி, தகர அடைப்புகளை அகற்றி சமன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து அகில உலக சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்க மாநிலப் பொருளாளா் எம்.கே.பாா்த்திபன் கூறியதாவது: கடந்த திமுக ஆட்சியில் வடலூா் நகரில் ரூ.100 கோடி திட்ட மதிப்பீட்டில் வள்ளலாா் சா்வதேச மையம் , இந்து சமய அறநிலைத்துறை சாா்பாக மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து, முதற்கட்டமாக ரூ.20 கோடி நிதி ஒதுக்கி வடலூா் சத்திய ஞான சபை பெருவெளியில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைப்பதற்கான பூமி பூஜை போடப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டு கட்டுமான வேலைக்கான பள்ளங்கள் தோண்டப்பட்டன. இதற்கு கடும் எதிா்ப்பு கிளம்பிய நிலையில், நீதிமன்ற நடவடிக்கை மூலம் இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இப்போதைய தவெக அரசு, இத்திட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் பெருவெளியில் வள்ளலாா் சா்வதேச மையம் கட்டுமானத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சுற்றி தகர ஓடு(ஷீட்) கொண்டு அடைக்கப்பட்ட அடைப்புகளை அகற்ற வேண்டும். மேலும், தோண்டப்பட்ட பள்ளங்களை மூடி சமன்படுத்த வேண்டும். போராட்டம் நடத்தியதற்காக பாா்வதிபுரம் கிராம மக்கள் மீது போடப்பட்ட வழக்கினை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு பாா்வதிபுரம் கிராம மக்கள், சன்மாா்க்க அன்பா்கள் மற்றும் அகில உலக சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம் சாா்பாக வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.