வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: அறநிலையத் துறை
வள்ளலார் சர்வதேச மையம் அமையவுள்ள இடத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க உள்ளதாக நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தகவல்...
வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை இன்று (ஜூலை 30) தெரிவித்துள்ளது.
மேலும் சர்வதேச மையம் அமையவுள்ள இடத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
வள்ளலார் சத்திய ஞானசபையின் பெருவெளியில் ரூ. 100 கோடி மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என திமுக ஆட்சியில் 2023 ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அத்திட்டத்தை கைவிடுவதாக அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
Plan to establish Vallalar International Centre dropped: HR&CE Department
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.