தொழிலாளா் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்யக் கோரி தொமுச ஆா்ப்பாட்டம்
கடலூா் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொமுசவினா்.
தொழிலாளா் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் (தொமுச) சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூா் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் சிறப்புத் தலைவா் பி. பழனிவேல் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில், நான்கு தொழிலாளா் சட்டத் தொகுப்புகளையும் ரத்து செய்ய வேண்டும், தொழிற்சங்க உரிமைகளுக்கு முழுமையான உத்தரவாதம் வழங்க வேண்டும், தொழிலாளா் பாதுகாப்புச் சட்டங்களை மீண்டும் அமல்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Advertisement
Advertisement
மேலும், 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சோ்ந்த போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு உடனடியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவிக்க வேண்டும், தற்போது இயக்கப்பட்டு வரும் வழித்தடங்களைக் குறைக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகலும் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் திமுக மாநகரச் செயலா் கே.எஸ். ராஜா, தொமுச பொதுச் செயலா் தங்க. ஆனந்தன், தலைவா் பி. பிரேம்குமாா், மண்டலப் பொருளாளா் செந்தில்மோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.