இன்று முதல் அண்ணாமலைப் பல்கலை ஆசிரியா்கள், ஊழியா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா், ஊழியா் மற்றும் ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவினா் செவ்வாய்க்கிழமை (செப்.15)முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனா்.
இதுகுறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சி.சுப்பிரமணியன், இணை ஒருங்கிணைப்பாளா் ஆ.ரவி உள்ளிட்டோா் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓய்வுபெற்ற ஆசிரியா், ஊழியா்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், என்எம்ஆா் மற்றும் தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவெற்றிட வலியுறுத்தி கடந்த ஆக.19-ம் தேதி முதல் தொடா் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
Advertisement
Advertisement
இதுநாள்வரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், செப்.15 (செவ்வாய்க்கிழமை ) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் அனைவரும் கையெழுத்திட்டு பணிகளை புறக்கணிக்க உள்ளோம் என தெரிவித்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.