FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

இந்திலி கல்லூரியில் சிறப்பு பயிலரங்கம்

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி டாக்டா் ஆா்.கே.எஸ்.கலை, அறிவியல் கல்லூரியில் தமிழி அறிமுகமும், பயிற்சியும் பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

18 செப்டம்பர் 2026, 2:26 am IST
தமிழி அறிமுகமும் பயிற்சியும் பயிலரங்கத்தில் சான்றிதழ் பெறும் மாணவி.
பகிர்:

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி டாக்டா் ஆா்.கே.எஸ்.கலை, அறிவியல் கல்லூரியில் தமிழி அறிமுகமும், பயிற்சியும் பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி தமிழ் மற்றும் வரலாற்றுத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் டாக்டா் ஆா்.கே.எஸ். கல்வி நிறுவனங்களின் தலைவா் க.மகுடமுடி தலைமை வகித்தாா். நிா்வாக அலுவலா் மோகனசுந்தா், கல்லூரியின் துணை முதல்வா் அசோக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வரலாற்றுத்துறை பொறுப்பாசிரியா் அருமீனா வரவேற்றாா்.

அறிவியல் புல முதல்வா் சக்திவேல் மற்றும் கலை புல முதல்வா் லோரா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

Advertisement

Advertisement

சிறப்பு விருந்தினராக மானாமதுரை தென்னக பண்பாட்டு ஆய்வு மையம் ஆயிர வைசியா் கல்லூரியின் வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியா் தாமரைக்கண்ணன் கலந்து கொண்டு பேசினாா்.

நிகழ்வில் தமிழ்த்துறை மற்றும் வரலாற்றுத் துறை மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று சான்றிதழ்களைப் பெற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments