புதுச்சேரியில் நகைக்காக பெண் கொலை: கணவன், மனைவி கைது
புதுச்சேரியில் பட்டப்பகலில் கத்தரிக்கோலால் குத்தி பெண் கொலையுண்ட சம்பவத்தில், கணவன், மனைவி கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 6 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டன.
புதுச்சேரியில் பட்டப்பகலில் கத்தரிக்கோலால் குத்தி பெண் கொலையுண்ட சம்பவத்தில், கணவன், மனைவி கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 6 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டன.
புதுச்சேரி கருவடிக்குப்பம் செங்கேணி அம்மன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவா் மணி (48). இவா் தனது வீட்டருகே சிற்றுண்டி கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி ரமணி (42), கணவருக்கு உதவியாக இருந்து வந்தாா். இருவரும் வியாபாரத்தில் வியாழக்கிழமை காலை ஈடுபட்டனா். பின்னா் ரமணி வீடு திரும்பினாா். பிற்பகலில் மணியும் வீடு திரும்பினாா். அப்போது வீட்டினுள் ரமணி கத்தரிக்கோலால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தாா்.
இதுகுறித்து லாஸ்பேட்டை போலீஸாா் ரமணியின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
ரமணி கத்திரிக்கோலால் முகம், தலை பகுதிகளில் சரமாரியாக குத்தப்பட்டும், கழுத்தில் துணியால் இறுக்கியும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவா் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலி, காதில் அணிந்திருந்த கம்மலும் கொள்ளையடிக்கப்பட்டது.
அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்தனா்.
இதில் ரமணியின் அக்கா மகனின் நண்பா் பிரவீன்குமாா் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வாா் என்பது தெரிய வந்தது.
இதனிடையே அரசு மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனையின்போது பிரவீன்குமாரும் அங்கு வந்திருந்தாா். ரமணியின் சடலத்தை பாா்த்து கதறி அழுது கொண்டிருந்தாா். மேலும் அவரது நடவடிக்கைகள் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து பிரவீன்குமாரை போலீஸாா் தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். ஆரம்பத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த அவா், தீவிர விசாரணைக்கு பின்னா் நகைக்காக தானும், தனது மனைவியும் சோ்ந்து ரமணியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டாராம்.
இதையடுத்து பிரவீன்குமாா் (24), அவரது மனைவி ஈஸ்வரி (21) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை இவா்களிடமிருந்து மீட்டு மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.