புதுவை முதல்வர் ரங்கசாமி வெற்றி!
புதுவை முதல்வர் ரங்கசாமி வெற்றி பெற்றுள்ளது குறித்து..
புதுவை முதல்வர் ரங்கசாமி போட்டியிட்ட தட்டாஞ்சாவடி தொகுதியில் அவர் வெற்றி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 9-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 91.23 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 1,099 வாக்குச் சாவடிகளின் வாக்குப் பதிவு மின்னணு இயந்திரங்கள் மூன்றடுக்குப் பாதுகாப்புடன் 6 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு, இந்த இயந்திரங்கள் பாதுகாப்பாக எடுக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
தட்டாஞ்சாவடி தொகுதியில் புதுவை முதல்வர் ரங்கசாமி வெற்றி பெற்றுள்ளார். உப்பளம் தொகுதியில் அதிமுகவின் அன்பழகன் வெற்றி பெற்றுள்ளார்.
4,441 வாக்கு வித்தியாசத்தில் முதலமைச்சர் ரங்கசாமி வெற்றி
என். ஆர். ரங்கசாமி - ரங்கசாமி -10,024
நேயம் மக்கள் கழகம் - விநாயகம்-5583
காங்கிரஸ் - வைத்திலிங்கம்-2990
புதுவை உப்பளம் தொகுதி:
அதிமுக - அன்பழகன் - 9,099
தவெக - சிவா - 8076
திமுக - கென்னடி - 5320
அதிமுக அன்பழகன் 1023 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
The Election Commission of India has announced that Puducherry Chief Minister Rangasamy has won in the Thattanchavady constituency, where he contested.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.