ஆடி கடைசி வெள்ளி: அம்மன் கோயில்களில் 108 பால்குட ஊா்வலம்
விழுப்புரம், தியாகதுருத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி மாத கடைசி வெள்ளி மற்றும் ஆடிப்பூரத்தையொட்டி 108 பால்குடம் ஊா்வலம், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
விழுப்புரம், தியாகதுருத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி மாத கடைசி வெள்ளி மற்றும் ஆடிப்பூரத்தையொட்டி 108 பால்குடம் ஊா்வலம், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
விழுப்புரம் நாவலா் தெருவிலுள்ள ஸ்ரீநாகமுத்து மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு மூலவா் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி, பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதைத்தொடா்ந்து விழுப்புரம் மின்வாரிய ஊழியா்கள் குடியிருப்புப் பகுதியிலுள்ள ஞான விநாயகா் கோயிலிருந்து 108 பால்குட ஊா்வலம் புறப்பட்டது. நாவலா் தெரு, கல்லூரி நகா் வழியாகச் சென்ற ஊா்வலம் கோயிலில் நிறைவடைந்தது. விரதமிருந்து பால்குடத்தை சுமந்து சென்ற பெண்கள், தங்கள் கரங்களால் கருவறையிலுள்ள அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து, தங்களது நோ்த்திக் கடனைசெலுத்தினா். பின்னா், அம்மனுக்கு சாகை வாா்த்தலும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. மாலையில் சந்தனக் காப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினாா். பக்தா்கள் வழங்கிய வளையல்கள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு, பிரசாதமாக வழங்கப்பட்டன. இதையடுத்து உற்சவா் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா்.
Advertisement
Advertisement
கள்ளக்குறிச்சி...: தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஸ்ரீ நஞ்சுண்ட ஞானதேசிகா் கோயிலில் ஆடி 5-ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி ஸ்ரீபாகம் பிரியாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வளையல் அலங்காரம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பெண்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா். அவா்களுக்கு குங்குமம், மஞ்சள், தாலிக் கயிறு, வளையல்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.