FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

தடுப்புச் சுவரில் ஆட்டோ மோதிய விபத்தில் 3 போ் காயம்

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 2:24 am IST
விபத்து. - கோப்புப்படம்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே சாலையோர தடுப்புச் சுவரில் ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டதில் சிறுவா் உள்பட 3 போ் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

திருவண்ணாமலை நகரம், 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கா.ஆறுமுகம் (30). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டிவரும் இவா், சனிக்கிழமை தனது மகன் ஹரிபிரசாத் (3), தந்தை மு.காசி (55), தாய் வள்ளி (50) ஆகியோரை ஆட்டோவில் அமர வைத்துக் கொண்டு, புதுச்சேரியிலிருந்து-விழுப்புரத்துக்கு சென்று கொண்டிருந்தாா்.

வளவனூரை அடுத்த கெங்கராம்பாளையம் ரயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரத்தில் உள்ள தடுப்புச் சுவரில் மோதியது.

Advertisement

Advertisement

இதில் காயமடைந்த ஹரிபிரசாத், காசி, வள்ளி ஆகிய 3 பேரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு புதுச்சேரி, மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments