நடிகை அபிநயாவுக்கு விரைவில் திருமணம்!
‘நாடோடிகள்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களைச் சென்றடைந்த நடிகை அபிநயாவுக்கு திருமணம்!
நடிகை அபிநயாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தமது இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்துள்ளார்.
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடித்த ‘நாடோடிகள்’ படத்தில் தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற அபிநயா, ஈசன் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
மலையாளத்தில் அவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து அண்மையில் வெளியாகிய ’பனி’ நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அபிநயாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர் தனது காதலரை கரம் பிடிக்கவுள்ளார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.