FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ரேட்டிங்கில் சன் டிவி தொடர்களைப் பின்னுக்குத் தள்ளிய ஜீ தமிழின் ‘செம்பருத்தி’ தொடர்!

சன் டிவி தொடர்களுக்குக் கடும் போட்டியளித்து வருகிறது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிற செம்பருத்தி தொடர்... 

Updated On : 8 ஜனவரி 2019, 3:54 pm IST
பகிர்:

சன் டிவி தொடர்களுக்குக் கடும் போட்டியளித்து வருகிறது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிற செம்பருத்தி தொடர். வருடக்கடைசி பார்க் ரேட்டிங்கில் இந்தத் தொடர் முன்னிலை பெற்றுள்ளது.

சுலைமான் இயக்கும் செம்பருத்தி தொடரில் ப்ரியா ராமன், ஷபனா, கார்த்திக் போன்றோர் நடித்து வருகிறார்கள். இதுவரை 368 எபிசோட்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் பார்க் டிவி நிகழ்ச்சிகளின் ரேட்டிங்கில் செம்பருத்தி தொடர், வருடக்கடைசியிலும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடருக்கும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாயகி தொடருக்கும் சமீபகாலமாகக் கடும் போட்டி நிலவி வருகிறது. இதையடுத்து டிசம்பர் 22 முதல் டிசம்பர் 28 வரையிலான பார்க் ரேட்டிங் தற்போது வெளியாகியுள்ளது. இதில் 10797 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து வெற்றிகரமாக 2018 வருடத்தை நிறைவு செய்துள்ளது செம்பருத்தி தொடர். சன் டிவியின் இதர தொடர்களான நாயகி, நந்தினி, கல்யாண வீடு போன்றவைப் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. 

Advertisement

Advertisement

எனினும் அதிக ரேட்டிங் கொண்ட தொலைக்காட்சிகளில் சன் டிவிக்கு முதலிடமும் ஜீ தமிழுக்கு இரண்டாமிடமும் கிடைத்துள்ளன. ஸ்டார் விஜய், கே டிவி, ஆதித்யா டிவி போன்றவை அடுத்த மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

தொலைக்காட்சித் தொடர்களில் சன் டிவி தொடர்களைத் தாண்டி ஜீ தமிழின் செம்பருத்தி தொடர் முதலிடம் பிடித்திருப்பது தொலைக்காட்சி வட்டாரத்தில் புதிய போட்டியை உருவாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments