FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

நிருபராக ஆசை! பத்திரிகையாளரால் ஈர்க்கப்பட்ட நடிகை!

பத்திரிகையாளராக வேண்டும் என்பதுதான் தனது நீண்டகால விருப்பம் என பாலிவுட் நடிகை ஹீனா கான் மனம் திறந்துள்ளார்.

Updated On : 5 அக்டோபர் 2022, 5:28 pm IST
ஹீனா கான்
பகிர்:

பத்திரிகையாளராக வேண்டும் என்பதுதான் தனது நீண்டகால விருப்பம் என பாலிவுட் நடிகை ஹீனா கான் மனம் திறந்துள்ளார். 

இதற்கு முன்பு ஐடி துறையில் பணிபுரிந்த அவர், தற்செயலாக பாலிவுட் நடிகையாக மாறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

பாலிவுட் நடிகையான ஹினா கான் கடந்த 13 ஆண்டுகளாக பாலிவுட் நடிகையாக மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு முதல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். 

Advertisement

Advertisement

இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது நீண்ட கால விருப்பம் குறித்து ஹீனா மனம் திறந்துள்ளார். 

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, நான் நடிகையாக வேண்டும் என நான் நினைத்ததில்லை. பத்திரிகையாளராக வேண்டும் என்பதே என் நீண்ட நாள் விருப்பம். பத்திரிகையாளர் பர்கா டுட்டால் நான் அதிகம் ஈர்க்கப்பட்டுள்ளேன். அவருடைய செய்தி வழங்கும் தன்மைக்கு நான் மிகப்பெரிய ரசிகை. ஆனால், விதி வேறு திட்டம் வைத்திருந்தது. தில்லியில் நடிப்புத் தேர்வுக்கான ஆடிஷன் நடைபெற்றது. நான் நண்பர்களின் வற்புறுத்தலால் கலந்துகொண்டேன். 

முதல் சுற்றில் தேர்ச்சி அடைந்த என்னை மும்பை அழைத்துச் சென்றனர். அங்கு அனைத்து சுற்றுகளிலும் தேர்ச்சி பெற்றதால் நடிகையாக மாறும் சூழல் நேர்ந்துவிட்டது. முதல் நாள் படப்பிடிப்பு தொடங்கியது. பிறகு பழகிவிட்டது. இப்படிதான் நான் நடிகையாக மாறினேன். ஆனால் பத்திரிகையாளராக வேண்டும் என்பதே எனது கனவு எனக் குறிப்பிட்டார். 

பர்கா டுட் முன்னணி ஆங்கில ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அதற்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது அவர் சுயமாக செய்தி நிறுவனம் நடத்தி வருகிறார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments