FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

விஜய் படத்தில் பிரியா ஆனந்த்: படக் குழு உறுதி செய்தது!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய் 67 படத்தில் நடிகை பிரியா ஆனந்த் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Updated On : 31 ஜனவரி 2023, 4:22 pm IST
பகிர்:

லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய் 67 படத்தில் நடிகை பிரியா ஆனந்த் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வாரிசு திரைப்படம் வெளியான  நிலையில், விஜய்யின் 67வது படத்தில் லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக விஜய் இணைந்துள்ளார்.

விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, விஜய் 67 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பணிகளை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடங்கியுள்ளார்.

Advertisement

Advertisement

தளபதி 67 எனப் பெயரிடப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 2ஆம் தேதி தொடங்கியதாக அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது.

ஒரு மாதமாக கொடைக்கானல் மற்றும் சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் இன்று காஷ்மீருக்கு தனிவிமானம் மூலம் சென்றனர்.

இந்நிலையில், அடுத்த 6 மணிநேரம் பட்டாசாகம் இருக்கும் என்று படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஸ் டிவிட்டரில் பதிவிட்டுள்ள நிலையில், தளபதி 67 படத்தில் பிரபல நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அடுத்த அப்டேட்டாக நடிகை பிரியா ஆனந்த் இப்படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தெரிவித்துள்ளது.

தொடர்ந்து ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வரும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments