FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

குடும்பத்திற்கு வரவேற்கிறேன் அண்ணி: லாவண்யாவை வரவேற்ற வருண் தேஜின் தங்கை! 

பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜிக்கு நடிகை லாவண்யாவுடன் நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

Updated On : 10 ஜூன் 2023, 2:28 pm IST
வருண் தேஜ், நிஹாரிகா, லாவண்யா.
பகிர்:

தெலுங்கில் 2014இல் முகுந்தா படத்தின் மூலம் அறிமுகமானவர் வருண் தேஜ். நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகனும் ஆவார் வருண் தேஜ். தெலுங்கில் முன்னணி நடிகராக நடித்து வருகிறார். சாய் பல்லவியுடன் நடித்த பிடா திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது. 

தமிழில் பிரம்மன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை லாவண்யா த்ரிப்பாதி. தெலுங்கில் வருண் தேஜுடன் இணைந்து 4 படங்களை நடித்துள்ளார். 2017இல் மிஸ்டர் படத்தில் நடித்தபோதே இருவருக்கு  காதல் பூத்ததாக தகவல்கள் கசிந்தது. இருப்பினும் இருவரு எதுவும் கூறாமல் தற்போது நிச்சய்தார்த்திற்குப் பிறகு தங்கள் காதலை வெளிப்படுத்தியுள்ளார்கள். 

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த நிச்சயதார்த்ததில் வருணின் பெரியப்பாவும் நடிகருமான சிரஞ்சீவி குடும்பத்தினரும் சித்தப்பாவும் நடிகருமான பவன் கல்யாண், சகோதரர் ராம் சரண் குடும்பத்தினரும், அல்லு அர்ஜுன் குடும்பத்தினரும், நண்பர்களும் கலந்து கொண்டுள்ளனர். 

இன்ஸ்டாகிராமில் நடிகர் வருண் தேஜ், ”காதலை கண்டுபிடித்தேன்” என பதிவிட்டுள்ளார். நடிகை லாவண்யா, “2016 முதல் முடிவிலிவரை... எனது எப்போதுமானவரை கண்டு பிடித்தேன்” எனப் பதிவிட்டுள்ளார். 

இந்நிலையில் நடிகையும் தயாரிப்பாளருமான வருண் தேஜின் தங்கை நிஹாரிகா கொனிடேலா, “இந்த நாளுக்காக காத்திருந்தேன். எங்களது குடும்பத்திற்கு வரவேற்கிறேன் அண்ணி” என பதிவிட்டுள்ளார். 

நடிகை சமந்தா உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments