FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சிறந்த நடிகர் விஜய் சேதுபதி, நடிகை சாய் பல்லவி! சர்வதேச திரைப்பட விழா விருது பட்டியல்!

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றவர்கள்...

Updated On : 20 டிசம்பர் 2024, 8:44 am IST
சிறந்த நடிகர் விஜய் சேதுபதி, நடிகை சாய் பல்லவி
பகிர்:

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கும், சிறந்த நடிகைக்கான விருது சாய் பல்லவிக்கும் வழங்கப்பட்டது.

சென்னை சர்வதேச திரைப்பட விழா 2024, டிசம்பர் 12 முதல் 19 வரை நடைபெற்றது. தமிழக அரசின் நிதியுதவியுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் நடத்தும் இந்த விழாவில் 180 படங்கள் திரையிடப்பட்டன.

விழாவின் இறுதியில் சிறந்த படம், இயக்குநர், நடிகர், நடிகை பிரிவில் வெள்ளிக்கிழமை விருதுகள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

சிறந்த படம்: அமரன் - இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கும், தயாரிப்பாளர் மகேந்திரனுக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

சிறந்த படம்(இரண்டாம் இடம்): லப்பர் பந்து - இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து, தயாரிப்பாளர் லக்ஷ்மணன் ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

சிறந்த நடிகர்: மகாராஜா திரைப்படத்துக்காக நடிகர் விஜய்சேதுபதிக்கு விருதுடன் ரூ. 50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

சிறந்த நடிகை: அமரன் திரைப்படத்துக்காக நடிகை சாய் பல்லவிக்கு விருதுடன் ரூ. 50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

சிறந்த துணை நடிகர்: தினேஷ்(லப்பர் பந்து)

சிறந்த துணை நடிகை: துஷரா விஜயன்(வேட்டையன்)

சிறந்த இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்(அமரன்)

மக்களுக்கு பிடித்த நடிகர்: அரவிந்த் சாமி(மெய்யழகன்)

மக்களுக்கு பிடித்த நடிகை: அன்னா பென்(கொட்டுக்காளி)

சிறந்த பொழுதுபோக்குப் படம்: வேட்டையன்

சிறந்த கதை: நித்திலன் சாமிநாதன்(மகாராஜா)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments