FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே வசூல் மழை! 9 நாள்களிலேயே இவ்வளவா?

ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே படத்தின் வசூல் குறித்து...

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 6:03 pm IST
ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே - மார்வெல்
பகிர்:

மார்வெல் ஸ்டூடியோஸின் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே படம் உலகளவில் ரூ. 13,500 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் டாம் ஹாலண்ட், ஜெண்டாயா, ஜேக்கப் பேட்டலான், மார்க் ருஃபாலோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம், உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் ஜூலை 31 ஆம் தேதியில் வெளியானது. ஆனால், சிறப்புக் காட்சியாக இந்தியாவில் ஜூலை 30 ஆம் தேதியிலேயே வெளியானது.

மார்வெல்லின் 38-வது திரைப்படமாகவும், எம்சியூவின் ஸ்பைடர்மேன் சீரியஸின் 4வது படமாகவும் வெளியாகியிருக்கும் ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே படம், 225 மில்லியன் டாலர் செலவில் (சுமார் ரூ. 2,146 கோடி) உருவாக்கப்பட்டது.

Advertisement

Advertisement

ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே, இந்தியாவில் வெளியான முதல் நாளிலேயே சுமார் ரூ. 72.44 கோடி வசூலித்து, இந்தியாவில் முதல் நாளிலேயே அதிகம் வசூலித்த முதல் ஹாலிவுட் படம் என்ற சாதனை படைத்தது.

இந்த நிலையில், இந்தியாவில் வெளியான 9 நாள்களிலேயே ரூ. 418 கோடிக்குமேல் இப்படம் வசூலித்துள்ளதாகவும், உலகளவில் ரூ. 13,500 கோடி வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இன்னும் சில நாள்களிலேயே ரூ. 15,000 கோடி வசூலித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, படத்தில் நடித்துள்ள டாம் ஹாலண்ட் - ஜெண்டாயாவுக்கு இங்கிலாந்தில் திருமணமும் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. நீண்டகாலமாகக் காதலித்து வந்த இருவரும், தங்களின் திருமணத்தை குறைவான விருந்தினர்களுடன் ரகசியமாக நடத்தியுள்ளனர்.

summary

‘Spider-Man: Brand New Day’ Becomes Highest-Grossing Movie of 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments