FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

தினமணி 85: தினமணி குறித்து ஆய்வு செய்து பட்டம் பெற்றவர்களுக்கு ஒரு மகத்தான வாய்ப்பு!

தினமணியில் வெளியான கட்டுரைகள் குறித்தோ அல்லது தினமணி குறித்தோ ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு ஒரு மகத்தான வாய்ப்பு காத்திருக்கிறது.

Updated On : 27 ஆகஸ்ட் 2019, 3:08 pm IST
பகிர்:


தினமணியில் வெளியான கட்டுரைகள் குறித்தோ அல்லது தினமணி குறித்தோ ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு ஒரு மகத்தான வாய்ப்பு காத்திருக்கிறது.

உங்களது தினமணி 85-ஆவது ஆண்டு இதழியல் பணியை நிறைவு செய்து 86வது ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறது. அதைக் கொண்டாடும் விதமாக தினமணி 85 என்கிற சிறப்பிதழ் வெளிவருகிறது.

தினமணி பத்திரிகை வெளியாகி 85 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, வெளியாகும் தினமணி 85 என்கிற சிறப்பிதழில் தமிழ் அறிஞர்களும், நிறைஞர் அல்லது முனைவர் பட்டம் பெற்றவர்களும் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அந்த வகையில் தினமணியில் வெளியான கட்டுரைகள் குறித்தோ அல்லது தினமணி குறித்தோ ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் அல்லது முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு இது ஒரு மகத்தான வாய்ப்பாகவே அமையும். 

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.. உங்கள் ஆய்வு குறித்த சுருக்கத்தை புகைப்படம், தன்விவரக் குறிப்புடன் உடனடியாக கீழ்க்காணும் முகவரிக்கு அல்லது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.

இதன் மூலம் நீங்கள் அனுப்பும் கட்டுரை, உங்கள் புகைப்படத்துடன் தினமணி 85 சிறப்பிதழில் வெளியாகும் வாய்ப்பு கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

முகவரி

ஆசிரியர், 
தினமணி நாளிதழ்,
எக்ஸ்பிரஸ் கார்டன்ஸ், 
எண்.29, இரண்டாவது முதன்மைச் சாலை, 
அம்பத்தூர் தொழிற்பேட்டை, 
சென்னை - 600 058
மின்னஞ்சல் - dinamani85@dinamani.com

•••

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments