பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு: மு.க. ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை - இபிஎஸ்
பெண்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதை முதல்வர் மு.க. ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என இபிஎஸ் விமர்சனம்.
பெண்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதை முதல்வர் மு.க. ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 14) விமர்சித்தார்.
பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றும் விதமாக நாடாளுமன்றத்தைக் கூட்ட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் அரசியல் ஆட்சி அமைப்பில் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இதனிடையே, தேர்தல் நேரத்தில் நாடாளுமன்றத்தைக் கூட்டுவது எதற்காக? என முதல்வர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக திண்டுக்கல்லில் செய்தியாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
''தேர்தல் நடக்கும் நேரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்தப்படுவது எதற்கு என்று ஸ்டாலின் கேட்கிறார். 5 மாநிலத்தில் மட்டுமே தேர்தல் நடத்தப்படுகிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் இல்லை. தேர்தல் தோல்வி பயத்தில் இத்தகைய கருத்தை முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார்.
பெண்களின் நீண்டகால கோரிக்கையான 33% இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேறியுள்ளது. பெண்கள் மிகவும் எதிர்பார்த்த கோரிக்கை இது. பெண்களின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக நாடாளுமன்றம் கூட்டப்படுகிறது. பெண்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதை முதல்வரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை'' என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Stalin cannot tolerate women receiving reservation Edappadi palanisamy
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.