விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது
விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி மயிலம், திண்டிவனம் (தனி) வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி மற்றும் திருக்கோவிலூர் ஆகிய 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 132 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்காக 7 தொகுதிகளிலும் 2,165 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
வாக்குப்பதிவு தொடக்கம்! இந்த வாக்குச்சாவடிகளில் காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். வாக்குச் சாவடி மையங்களில் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
Voting has begun in Villupuram district and is underway in full swing.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.