பெல் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புராஜெக்ட் பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...
நவரத்னா நிறுவனமும், பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நாட்டின் முதன்மையான தொழில்முறை மின்னணுவியல் நிறுவனமுமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம், தனது பெங்களூரு பிரிவில் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 16 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். No.: 6050/HR/(SC & UC)/PE/2026
பணி: Project Engineer
Advertisement
Advertisement
காலியிடங்கள்: 4
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 55,000
தகுதி: பொறியியல் துறையில் பிஇ, பி.டெக், பி.எஸ்சி பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பெல் நிறுவனத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக்கடிதம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். இது குறித்த விபரம் இணையதளத்திலும் வெளியிடப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.400 மட்டும். கட்டணத்தை எஸ்பிஐ வங்கி மூலமாக ஆன்லைன் முறையில் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: WWW.bel-india.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 16.6.2026
நேர்முகத் தேர்வுக்கு வரும்போது விண்ணப்பப் படிவ நகல் மற்றும் அசல் சான்றிதழ்களை கொண்டு வரவும்.
விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Advertisement for the post of Project Engineer for Strategic Communication SBU of BEL Bangalore Complex
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.