FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரசுப் பணிகள்

சென்னை மாநகராட்சியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையில் நிரப்பப்பட உள்ள மருத்துவ அலுவலர், செவிலியர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 31 அக்டோபர் 2022, 2:59 pm IST
பகிர்:

சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையில் நிரப்பப்பட உள்ள மருத்துவ அலுவலர், செவிலியர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து நவம்பர் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Medical Officer - 19
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் முடித்து
தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ ஆணையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

Advertisement

Advertisement

பணி: Staff Nurse 
காலியிடங்கள்: 39
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் 4 ஆண்டு பி.எஸ்சி நர்சிங் முடித்திருக்க வேண்டும் அல்லது அல்லது நர்சிங் டிப்ளமோ அல்லது பொது நர்சிங் பிரிவில் டிப்ளமோ முடித்து நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Member Secretary, Chennai City Urban Health Mission
Public Health Department, Ripon Buildings,
Chennai – 600 003

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 10.11.2022

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments