FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குரூப்4 தேர்வுக்கான தேதியை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி!

குரூப்4 தேர்வுக்கான தேதி மற்றும் மொத்தக் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

7 பிப்ரவரி 2024, 8:41 pm IST
கோப்புப்படம்
பகிர்:

குரூப்4 தேர்வுக்கான தேதி மற்றும் மொத்தக் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் குரூப்4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜூன் 9-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை குரூப்4 தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

108 கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட மொத்தம் 6,244 காலிப் பணியிடங்களுக்கு குரூப்4 தேர்வு நடைபெற உள்ளது. 

இந்தத் தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப். 28 ஆகும். 

விண்ணப்பத்தில் ஏற்பட்ட பிழைகளைத் திருத்துவதற்கு மார்ச் 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments